தமிழ்நாடு அரசு – கால்நடை பண்ணை அமைப்பதற்கு மானிய உதவி!

தமிழ்நாடு அரசு, கால்நடை பண்ணை அமைக்க விரும்பும் தொழில்முனைவோர்களுக்கு மானிய உதவியுடன் ஊக்குவிப்பு வழங்குகிறது. புதிய கோழி, செம்மறியாடு, வெள்ளாடு, பன்றி பண்ணைகள் அமைப்பதன் மூலம் இறைச்சி, முட்டை உற்பத்தி மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தொகை விபரங்கள்:
கோழி பண்ணை + குஞ்சு பொரிப்பகம் – ரூ. 25 லட்சம் வரை
செம்மறியாடு/வெள்ளாடு பண்ணை – ரூ. 10 லட்சம் முதல் ரூ. 50 லட்சம் வரை
பன்றி பண்ணை – ரூ. 15 லட்சம் முதல் ரூ. 30 லட்சம் வரை
தீவன சேமிப்பு, உற்பத்தி, வளர்ப்பு வசதிகள் – மானிய உதவி வழங்கப்படும்

தகுதி: தனிநபர்கள், SHG, FPO, JLG, விவசாய கூட்டுறவுகள் மற்றும் பிரிவு 8 நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க:
[https://nlm.udyamimitra.in/](https://nlm.udyamimitra.in/)
மேலும் தகவல்: [http://www.tnlda.tn.gov.in/](http://www.tnlda.tn.gov.in/)

அருகிலுள்ள கால்நடை மருத்துவர்கள், அலுவலர்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெறலாம்.


Facebook


Telegram


Instagram


X


YouTube


LinkedIn


WhatsApp